மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாயும் மகளும் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சி.

சுரேஷ்பாபு

UPDATED: May 15, 2023, 7:59:54 PM

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடம்பத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட வெங்கத்தூர் கிராமத்தில் வசித்து வரும் சுடர்மணி செல்வி இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக பணியாற்றி வருகிறார் சுடர்மனி,

இவரது மூன்றாவது மகன் நவீன் குமார் அரக்கோணத்தில் தனியார் பாலிடெக்னியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில் திடீரென மணவாள நகர் உதவி காவல் ஆய்வாளர் கல்லூரிக்கு சென்று கொண்டிருக்கின்ற நவீன் ஐ கஞ்சா வைத்திருப்பதாக கைது செய்து இருக்கிறார், பொய்யான குற்றச்சாட்டு சொல்லி கைது செய்த துணை ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று,

நவீன் உடைய அம்மா, அப்பா, அக்கா, அண்ணன் ஆகியோர் குடும்பமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு  வந்து மண்ணெண்ணெய் மேலே ஊற்றி தற்கொலைக்கு முயன்றனர்.

உடனடியாக திருவள்ளூர் தாலுகா காவல்துறையினர்  தடுத்து நிறுத்தினார்கள்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended