கவனத்தை சிதற விட்ட பேருந்து ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கிய பேருந்து அலறிய முப்பதுக்கும் மேற்பட்ட பயணிகள்
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே சோழத்தரம் கிராமப்பகுதியில் சென்னையிலிருந்து கும்பகோணம் நோக்கி சென்ற அரசு பேருந்து , திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்து மண் தரையில் இறங்கியது.
இதனால் பேருந்தில் பயணம் செய்த பல்வேறு ஊர்களைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட பேருந்து பயணிகள் உயிர் ஆபத்தில் தங்களை காப்பாற்றுங்கள் என கூறி அலறி அடித்து பேருந்தில் இருந்து இறங்க முற்பட்டனர்.
அப்போது சமயோஜிதமாக பேருந்தின் ஓட்டுநர் பேருந்தில் இயக்கத்தை நிறுத்தி பேருந்தை மேலும் சாயாமல் தடுத்தார் , இதனால் மிகப் பெரிய அசம்பாவிதம் ஏற்படவிருந்தது தவிர்க்கப்பட்டது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கும் போது சாலை விரிவாக்கப் பணியில் சரிவர சாலையை பராமரிக்க இயலாத நிலையில் சாலை மேட்டில் இருந்து பள்ளமான சாலையில்
இறங்கும் வழியில் ஓட்டுனரின் கவனம் சிதறி சாலையை விட்டு பேருந்து மண் தரையில் இறங்கியுள்ளது.
சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு பேருந்து டிராக்டர் மூலம் கட்டி இழுக்கப்பட்டு சாலையில் இயல்பு நிலைக்கு கொண்டு வரப்பட்டு, மீண்டும் பேருந்து கும்பகோணம் நோக்கி சென்றது. பேருந்தில் பயணம் செய்த பயணிகளும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
ஸ்ரீமுஷ்ணம் செய்தியாளர் சண்முகம்.