திருச்சி ஸ்ரீ புத்தடி மாரியம்மன் ஆலய பால்குடம், அக்னிசட்டி ஊர்வலம -விசிக சார்பில் 700க்கு மேற்பட்ட பக்தர்களுக்கு ரோஸ் மில்க், நீர்மோர் வழங்கப்பட்டது.
JK
UPDATED: May 7, 2023, 9:09:09 AM
திருச்சி மிளகு பாறையில் உள்ள ஸ்ரீபுத்தடி மாரியம்மன் கோவில் விழா நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று காலை திருச்சி உய்யகொண்டான் ஆற்றின் படித்துரையிலிருந்து பக்தர்கள் மஞ்சள் ஆடை அணிந்து பால்குடம், அக்னிசட்டி, அலகுகுத்தி, காவடி எடுத்து ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
ஊர்வலத்தில் கலந்து கொண்ட 700க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு திருச்சி மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் 2வது வருடமாக மாநகர மாவட்ட துணைச் செயலாளர் புல்லட்லாரன்ஸ் தலைமையில் வெயிலில் நடைபயணமாக வந்த 700க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு ரோஸ்மில்க், நீர்மோர், பாதாம்பால், ஃப்ரூட் மிக்ஸ் ஆகியவை வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாநில நிர்வாகி அரசு மற்றும் அலெக்ஸ், ஜெயக்குமார், மோகன், தங்கவேல், ரத்தினம், பிரதீப், மணிபிரோஸ், உட்பட பலர் கலந்து கொண்டனர்.