Author: இளவரசன்

Category: மாவட்டச் செய்தி

தமிழகம் முழுவதும் கேரளா ஸ்டோரி திரைப்படத்தை தடை செய்ய வலியுறுத்தி பல்வேறு கட்சிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

அதன் அடிப்படையில் திருவாரூர் வடக்கு மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் திருவாரூர் புதிய பேருந்து நிலையம் எதிரில் கேரளா ஸ்டோரி உள்ளிட்ட படங்களை தடை செய்ய வலியுறுத்தி வடக்கு மாவட்ட தலைவர் பீர் முகமது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சமீபத்தில் வெளியாகியுள்ள கேரளா ஸ்டோரி வெளியாக உள்ள பர்கானா மற்றும் ஏற்கனவே வெளியான புர்கா போன்ற திரைப்படங்களை உடனடியாக தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மேலும் இந்த படத்தை வெளியிடுவதற்கு தமிழக அரசு உறுதுணையாக இருந்ததாக கூறி தமிழக அரசை கண்டித்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மேலும் கேரளா ஸ்டோரி திரைப்படத்தில் இஸ்லாமிய பெண்களின் உரிமைகள் பறிக்கப்படுவது போன்ற தோற்றத்தை உருவாக்க முயற்சிப்பதாகவும் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் இந்த திரைப்படம் உள்ளதாகவும் இந்த படத்தை எடுத்தவர்களோடு பொது மேடையில் விவாதிப்பதற்கு தயார் என்றும் ஆர்ப்பாட்டத்தில் பங்கு பெற்றவர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இதில் 500க்கும் மேற்பட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்த பெண்கள் ஆண்கள் குழந்தைகள் என பலரும் கலந்துகொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Tags:

#thiruvarurnewstamil #thekeralafiles #indrayaseithigaltamilnadu #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #tamilnews #tamillatestnews #todaysindianews #tamilpoliticalnews #aanmegamnews #todaystamilnadunews #thiruvarurnews #thiruvarurnewslive #thiruvarurnewstoday #thiruvarurnewsintamil #indrayaseithigalthiruvarur #thiruvarurlatestnews #thiruvarurtodaynews #இன்றையசெய்திகள்திருவாரூர் #இன்றையமுக்கியசெய்திகள்திருவாரூர் #இன்றையதலைப்புச்செய்திகள்திருவாரூர் #thegreatindianews #tginews #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு
Comments & Conversations - 0