அண்ணா பல்கலை கழகத்தில் மீண்டும் பணி வழங்க கோரி 500க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதம்.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில், அண்ணாமலை பல்கலைகழகம் 2017 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்திலிருந்து பணி நிரவல் என்ற பெயரில் வெளியேற்றப்பட்ட பணியாளர்களை மீண்டும் பல்கலைக்கழகத்திற்கு பணி வழங்க வேண்டும் என்றும் , இல்லையென்றால் சுழற்சி முறையில் பணியாளர்கள் பணி நிரவல் செய்திட வேண்டும் .
இல்லையென்றால் சுழற்சிமுறையில் பணியாளர்களை பணி நிறைவு செய்திட வேண்டும் பணி நிரவல் செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண் பணியாளர்களை எந்த நிபந்தனையின்றி உடனடியாக பல்கலைக்கழகத்தில் பணி வழங்க வேண்டும் என்று உள்ளிட்ட கோரிக்கைகள் மீது தமிழக அரசின் கவனத்தை ஈர்க்க தொடர் உண்ணாவிரத அறப்போராட்டத்தை அண்ணாமலை பல்கலைக்கழக பணி நிரவல் ஊழியர்கள் நல சங்கத்தின் சார்பில் பல்கலைக்கழக பூமா கோயில் எதிரில் தொடர் உண்ணாநிலை அறப் போராட்டத்தை சுமார் ஐநூறுக்கு மேற்பட்ட பணியாளர்கள் ஆரம்பித்து உள்ளார்கள்.
தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் இந்த அறப்போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார் .
அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் இந்த பல்கலைக்கழகத்தில் இருந்து பணிநிரவலில் வெளியே சென்றவர்கள் 600 பேரையாவது உடனடியாக பல்கலைக்கழகத்தில் சுழற்சிமுறையில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் , இல்லை என்றால் மாநில நிர்வாகக் குழுவை கூட்டி தமிழகம் முழுவதும் அறப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறியுள்ளார்.
பேட்டி அளிப்பவர் சிங்காரம், மாநில துணைத் தலைவர் அரசு பணியாளர்கள் சங்கம்.
ஸ்ரீமுஷ்ணம் செய்தியாளர் சண்முகம்.