குரங்கு அம்மை நோய் பாதிப்பு மக்கள் பீதி ?
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
இங்கிலாந்தில் மேலும் இரண்டுபேருக்கு குரங்கு அம்மைநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
நைஜீரியாவிலிருந்து லண்டன் திரும்பிய நபருக்கு கடந்த 7 ம் தேதி குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் லண்டனில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு பேருக்கு குரங்கு அம்மைநோய் கண்டறியப் பட்டுள்ளது.
மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில் தொற்றினால் பாதிக்கப்பட்ட விலங்குகளை உண்பதன் மூலம் குரங்கு அம்மைநோய் பரவி இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த நோய் எளிதில் மக்களிடையே பரவாது என்றாலும், நோய் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து தனித்திருப்பது நல்லது என பிரிட்டன் சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.
செய்தியாளர் பா. கணேசன்.