• முகப்பு
  • tamilnadu
  • இந்திய விடுதலைப் போராளி அஞ்சலை பொன்னுசாமி மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்.

இந்திய விடுதலைப் போராளி அஞ்சலை பொன்னுசாமி மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

1943-ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போரின்போது நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் இந்திய தேசிய இராணுவத்தில் (I.N.A) ஜான்சி ராணி படைப்பிரிவில் இணைந்து இந்தியாவின் விடுதலைக்காகப் போராடிய வீரமங்கையான அஞ்சலை பொன்னுசாமி அம்மாள் (102 வயது) நேற்று முன்தினம் மலேசியாவின் செந்துல் நகரில் காலமாகியுள்ளார். அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்தியாவில் பிறக்காவிட்டாலும், வாழாவிட்டாலும் 21 வயதே ஆன நிலையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் படையில் சேர்ந்து கடும் நெருக்கடி மிகுந்த சூழல்களில் இந்தியாவின் விடுதலைக்காகப் போராடியவர் அஞ்சலை பொன்னுசாமி அம்மாள். இந்தியா, மலேசியா ஆகிய நாடுகள் முறையே 1947 மற்றும் 1957 ஆண்டில் விடுதலை பெற்றதைக் கண்டு மகிழ்ச்சியடைந்து நிறைவாழ்வு வாழ்ந்து அவர் விடைபெற்றிருக்கிறார். வீரம், மனவுறுதி, துணிச்சல் ஆகிய பண்புகளால் பெண்குலத்துக்கே சிறந்ததோர் எடுத்துக்காட்டாக விளங்கிய அஞ்சலை பொன்னுசாமி அம்மாளின் தியாகம் இந்திய விடுதலை வரலாற்றில் என்றும் அழியாப்புகழ் பெற்று விளங்கும் என கூறியுள்ளார்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended