மு.க.ஸ்டாலின் சிங்கப்பூருக்கு தமிழகத்தை முதலிடம் கொண்டு வருவதற்காக செல்லவில்லை அவருடைய முதலீட்டை அங்கு செய்வதற்காக தான் சென்றுள்ளார்.
முத்தையா
UPDATED: May 29, 2023, 2:02:18 PM
கன்னியாகுமரி மாவட்டம் : தமிழக அரசை கண்டித்து நாகர்கோவிலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுக மாநில அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் பேசுகையில்,
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிங்கப்பூருக்கு, தமிழகத்தை முதலிடம் கொண்டு வருவதற்காக செல்லவில்லை அவருடைய முதலீட்டை அங்கு செய்வதற்காக தான் சென்றுள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டிற்கு சோதனை நடத்த சென்ற அதிகாரிகள் தாக்கப்பட்டுள்ளனர்.
அ.தி.மு.க.வில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது ஆர்.டி.ஓ. பதவிக்கு ரூ.25 லட்சத்தை வாங்கி ஏமாற்றியுள்ளார்.
டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. தி.மு.க. ஆட்சியில் ஊழல் அதிகரித்துள்ளது.
இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப அனைவரும் ஒருங்கிணைந்து போராட வேண்டும் என்று கூறினார், இதில் பச்சைமால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.