தீர்வு கேட்டு வந்த பெண்ணை அடித்த அமைச்சர்: பொதுமக்கள் அதிர்ச்சி. VIRAL VIDEO
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
விருதுநகர்: தீர்வு கேட்டு மனு கொடுத்த பெண்ணை அமைச்சர் தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது.
இது குறித்து பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் விருதுநகர் மாவட்டம் பாலவனத்தம் கிராமத்திற்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் ஆய்வுக்காக வந்திருந்தார். அப்போது ஏழை பெண் ஒருவர் அமைச்சரிடம் மனு கொடுத்துள்ளார். மனுவை கையில் வைத்திருந்த அமைச்சர் அருகே நின்றிருந்த அதிகாரியிடம் கேட்டறிந்தார்.
அப்போது அந்த பெண் தனது மனு குறித்து அமைச்சரிடம் தொடர்ந்து விளக்கம் அளித்தார். உடனே ஆத்திரமடைந்த அமைச்சர் மனுவால் அப்பெண்ணை தலையில் தாக்கினார். பொதுமக்கள் முன்னிலையில் ஏழை பெண்ணை அமைச்சர் தாக்கிய வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தவீடியோ குறித்து, அண்ணாமலை தனது டுவிட்டரில் கூறியதாவது,
மக்கள் என்ன உங்கள் அடிமைகளா.
விருதுநகர், பாலவனத்தம்
கிராமத்தில் தீர்வு தேடி வந்த ஏழைத்தாயை அடித்த
அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் அடுத்த 48 மணி நேரத்திற்குள் அமைச்சர் பதவி விலக வேண்டும் அல்லது அவரது வீட்டை முற்றுகை இடப்படும் என்று கூறியிருக்கிறார்.
கள்ளக்குறிச்சி செய்தியாளர் அஜய்குமார்.