• முகப்பு
  • அரசியல்
  • டெல்டா மாவட்டங்களில் விவசாயம் சார்ந்த தொழில் பேட்டைகள் வெகு விரைவில் வரும் என தஞ்சையில் தொழிற்த்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பேட்டி.

டெல்டா மாவட்டங்களில் விவசாயம் சார்ந்த தொழில் பேட்டைகள் வெகு விரைவில் வரும் என தஞ்சையில் தொழிற்த்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பேட்டி.

ஆர்.ஜெயச்சந்திரன்

UPDATED: May 15, 2023, 6:35:56 PM

தமிழ்நாடு முதல்வர் டெல்டா மாவட்டம் மீது மிகுந்த பாசம் வைத்துள்ளார். விவசாயத்திற்கு என்று தனி பட்ஜெட் கொடுத்தவர், தற்போது டெல்டா மாவட்டங்களில் வேளாண் சார்ந்த தொழிற்சாலை வருவதற்கு ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளார்.

நிச்சயமாக வெகுவிரைவில் விவசாயம் சார்ந்த தொழில் பேட்டைகள் அமைவதற்கான சாத்திய கூறுகள் உள்ளன.

டெல்டா மாவட்டங்களில் நிலம் கிடைப்பது கடினம் யாரேனும் நிலத்தை தாமாக முன்வந்து கொடுக்க வந்தால் மிகவும் சந்தோஷம் , சிறிய அளவிலான விவசாயம் சார்ந்த மதிப்பு கூட்டு தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும்.

சிறப்பான திட்டங்கள் வெகுவிரைவில் டெல்டா மாவட்டங்களுக்கு வரும் அறுவடைக்குப் பிறகு அதனை மதிப்பு கூட்டி விற்பனை செய்யும் வகையில் தொழிற்சாலைகள் தொடங்கப்படும் என்றார்.

இந்த அமைச்சர் பதவி என்பது எனக்கானது மட்டுமல்ல அனைவருக்கும் ஆன பதவி , முதலமைச்சர் எப்போது டெல்டாக்காரன் என சொன்னபோதே அப்போது நாங்கள் அனைவரும் அமைச்சராகி விட்டோம் என்றார்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended