அமைச்சர் கே.என்.நேரு இன்று (17.6.22) முக்கொம்பு கொள்ளிடத்தில், புதிதாகக் கட்டப்பட்டு வரும் கதவணைப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வருகின்ற 26 ஆம் தேதி முக்கொம்பு கொள்ளிடத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கதவணையினைத் திறந்து வைக்கவுள்ளதை முன்னிட்டு, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் இன்று (17.6.22) முக்கொம்பு கொள்ளிடத்தில், புதிதாகக் கட்டப்பட்டு வரும் கதவணைப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார், இ.ஆ.ப., வணக்கத்திற்குரிய மாநகராட்சி மேயர் மு. அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.எம் பழனியாண்டி, அ. சௌந்தரபாண்டியன், செ.ஸ்டாலின் குமார்,
செயற்பொறியாளர்கள் ஆர்.கீதா மணிமோகன் ஆகியோர் உள்பட பலர் உடனிருந்தனர்.
மணப்பாறை செய்தியாளர் லட்சுமணன்