ரேஷன் கடையை திறந்து வைத்தார் அமைச்சர் கே. என். நேரு.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
திருச்சிராப்பள்ளி மாவட்டம், லால்குடி ஒன்றியம் , ஆங்கரை கோவிந்தராஜபுரத்தில் முழு நேர நியாய விலைக்கடையினை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என். நேரு அவர்கள் இன்று (25.6.22) திறந்து வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார், இ.ஆ.ப., சட்டமன்ற உறுப்பினர் அ. சௌந்தரபாண்டியன், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் தி. ஜெயராமன், ஒன்றியக் குழுத் தலைவர் திரு.தி. ரவிச்சந்திரன் , மாவட்டப் பிரமுகர் க.வைரமணி ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.