• முகப்பு
  • india
  • தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் பற்றி, சமூக வலைதளத்தில் தரக்குறைவாக விமர்சித்த மராத்திமொழி நடிகை கேதகிசிதலே கைது ?

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் பற்றி, சமூக வலைதளத்தில் தரக்குறைவாக விமர்சித்த மராத்திமொழி நடிகை கேதகிசிதலே கைது ?

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ்தாக்கரே தலைமையில் சிவசேனா, தேசியவாதகாங்கிரஸ் மற்றும் காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, மராத்திமொழி நடிகை கேதகிசிதலே, சமூகவலைதளம் ஒன்றில் வெளியிட்ட பதிவில், தேசிய வாதகாங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான சரத்பவாரை காட்டமாக விமர்சித்திருந்தார் அப்பதிவில், 'நீங்கள் பிராமணர்களை வெறுக்கிறீர்கள்; உங்களுக்கு நரகம் காத்திருக்கிறது ' எனக்கூறியிருந்தார். இது, தேசியவாத காங்கிரஸ் கட்சியினருக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. இது பற்றி கட்சியின் மூத்தத்தலைவர்கள் கூறுகையில், 'சரத்பவார் எங்களுக்கு தந்தை போன்றவர். அவரைவிமர்சிப்பதை ஒருநாளும் பொறுத்துகாகொள்ள முடியாது. 'ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பா.ஜ., வின் துாண்டுதல் படி தான், பவாரை கேதகிசிதலே விமர்சித்துள்ளார். அவர் மீது, கடும்நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர். இதையடுத்து, நடிகைகேதகி சிதலே மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended