• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • தென்காசி மாவட்டத்தில் 2022-2023-ம் நிதியாண்டு - சிறப்பாக செயல்படும் சுய உதவிக்குழுக்கு மணிமேகலை விருதுகள்.

தென்காசி மாவட்டத்தில் 2022-2023-ம் நிதியாண்டு - சிறப்பாக செயல்படும் சுய உதவிக்குழுக்கு மணிமேகலை விருதுகள்.

ராஜ்குமார்

UPDATED: May 25, 2023, 7:21:17 PM

மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிகளில் உள்ள சுய உதவிக்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் மற்றும் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகர்புறங்களில் உள்ள சுய உதவிக்குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்புகள் மற்றும் தொகுதி அளவிலான கூட்டமைப்புகள் ஆகிய சமுதாய அமைப்புகளுக்கு மணிமேகலை விருது மற்றும் பரிசுத் தொகை  வழங்கப்படவுள்ளது.

எனவே, தென்காசி மாவட்டத்தில்  சிறப்பாக செயல்படும் தகுதியான சுய உதவிக்குழுக்கள் / சமுதாய அமைப்புகள் விண்ணப்பங்களை அந்தந்த உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்களில் செயல்படும் ஊரகம் / நகர்புற வாழ்வாதார இயக்க அலகில் 26.05.2023 முதல் 25.6.2023 -க்குள் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended