வெள்ளக்குளம் எரிவாயு தகனமேடையில் பழுது பார்க்கும் பராமரிப்பு பணி.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
காஞ்சிபுரம் : மாநகராட்சிக்குட்பட்ட வெள்ளக்குளம் எரிவாயு தகனமேடையில் பழுது பார்க்கும் பராமரிப்பு பணி காரணமாக 02/05/2022 முதல் தகன மேடை இயங்காது என்றும் அதற்க்கு பதிலாக தற்காலிகமாக தாயார் குளம் தகனமேடை அருகில் உள்ள திறந்தவெளி மைதானத்தில் தகனம் செய்யுமாறு காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த தகன மேடைக்கு செல்லும் தூரமும் அதிகம் மற்றும் இதனால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படும், எனவே வெள்ளக்குளம் தகன மேடையை மின்சார தகன மேடையாக மாற்றி பொதுமக்களின் செயல் பாட்டுக்கு கொண்டுவர வேண்டுகிறோம்.
வெள்ளக்குளம் தகன மேடை அருகில் குப்பைகளை கொட்டி சுகாதார மற்ற நிலையில் உள்ளது எனவே இதன்மீது உரிய நடவடிக்கை எடுத்து மின்சார தகன மேடையை செயல் பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று சமூக ஆர்வலரும் மற்றும் மிஸ்ரிநகர் சமூக நல கூட்டமைப்பு குழுமம் தலைவருமான இரா.வெங்கடேசன் வேண்டுகோள்.
செய்தியாளர் பாஸ்கர்