• முகப்பு
  • district
  • உளுந்தூர்பேட்டையில் அன்பு சுவரை சட்டமன்ற உறுப்பினர் மணிகண்ணன் தொடங்கி வைத்தார்.

உளுந்தூர்பேட்டையில் அன்பு சுவரை சட்டமன்ற உறுப்பினர் மணிகண்ணன் தொடங்கி வைத்தார்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் சென்னை சாலையில் உள்ள கட்டிடத்தில் அன்பு சுவர் அமைக்கப்பட்டுள்ளது . ரோட்டரி சங்கத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அன்பு சுவரில் அலமாரிகள் வைக்கப்பட்டு திறக்கப்பட்டது . இதில் வீடுகளில் தேவைக்கு அதிகமாக உள்ள தேவையற்ற பொருட்கள், ஆடைகளையும் பொதுமக்கள் அங்கு வைத்தால் தேவையானவர்கள் ஏழை எளிய மக்கள் அதனை எளிய முறையில் பெற்றுச் செல்வார்கள். இதனால் ஏழை எளிய மக்கள் குற்றச் செயல்களில் ஈடுபடும் நிகழ்வுகள் குறையும் என்பதற்காகவே ரோட்டரி சங்கம் இந்த ஏற்பாட்டை செய்துள்ளனர். அன்பு சுவரை உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிகண்ணன் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி சங்கத்தின் தலைவர் ரமேஷ் பாபு , உளுந்தூர்பேட்டை நகர மன்ற தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் திருநாவுக்கரசு , நகர மன்ற துணைத் தலைவர் வைத்தியநாதன் , நகராட்சி கவுன்சிலர் செல்வம் டேனியல் ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended