திருவாரூர் அருகே கட்டுப்பாட்டை இழந்து வீட்டுக்குள் புகுந்த லாரி.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டிக்கு பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரி மணலை இறக்கிவிட்டு திருத்துறைப்பூண்டியில் இருந்து திருவாரூர் நோக்கி வந்து கொண்டிருந்த போது கட்டுபாட்டை இழந்து தென்னவராயநல்லூரில் சாலை அருகே உள்ள குடிசை வீட்டுக்குள் புகுந்தது.
லாரி வீட்டிற்குள் புகுந்ததில் சுவர் இடிந்து விழுந்து அந்த வீட்டில் இருந்த துரைசாமி மகன் ராஜா அவரது மனைவி மீனா மற்றும் அவரது மைத்துனர் நேதாஜி ஆகிய மூன்று பேரும் காயமடைந்தனர்.முன்னதாக கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலை ஓரத்தில் இருசக்கர வாகனத்தில் பால் வியாபாரம் செய்து கொண்டிருந்த புலிவலம் பகுதியை சேர்ந்த பாஸ்கரன் வயது 22 என்பவர் மீது லாரி உரசியதில் அவர் சாலையில் விழுந்து காயமடைந்தார்.
இந்த விபத்தில் லாரியை ஒட்டி வந்த பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியை சேர்ந்த தங்கராசு மகன் ராஜ்குமார் என்பவரும் காயமடைந்து திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இது குறித்து திருவாரூர் தாலுகா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருவாரூர் செய்தியாளர் இளவரசன்.