Author: THE GREAT INDIA NEWS

Category:

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள லட்சுமண பட்டியில் உள்ள சங்கிலி கருப்பர் ஆலயத்திற்காக வருடம்தோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருவது வழக்கமாக உள்ளது இதேபோல் இந்த வருடத்திற்கான இந்த புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகள் 300-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு போட்டி போட்டு காளைகளை அடக்கி வருகின்றனர் இதில் வெற்றி பெற்ற காளைகளுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் பீரோல் கட்டில் சில்வர் பாத்திரங்கள் என பல்வேறு விதமான பரிசுப் பொருட்கள் ஜல்லிக்கட்டு நிர்வாக கமிட்டியினரால் வழங்கப்பட்டு வருகின்றன மேலும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் புதுக்கோட்டை திருச்சி தஞ்சாவூர் என தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள் பங்கு பெற்று வருகின்றன எனவே மாவட்ட நிர்வாகத்தின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு இந்த ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது

Tags:

Comments & Conversations - 0