Author: THE GREAT INDIA NEWS

Category: district

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் தலைமையில் இன்று (07.07.2022) திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த வருவாய்த்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சட்டத்துறை அமைச்சர். எஸ்.இரகுபதி, போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாநகராட்சி மேயர் மு.அன்பழகன். நாடாளுமன்ற உறுப்பினர் சு.திருநாவுக்கரசர். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த்,இ.ஆ.ப., கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் ஆணையர எஸ்.கே.பிரபாகர்,இ.ஆ.ப., நிலஅளவை மற்றும் நில வரித்திட்ட இயக்குநர் டாக்டர் டி.ஜி.வினய்,இ.ஆ.ப., நில நிர்வாக கூடுதல் ஆணையர் எஸ்.ஜெயந்தி,இ.ஆ.ப., வருவாய் நிர்வாக இணை ஆணையர் ஏ.ஜான் லூயிஸ், இ.ஆ.ப., சட்டமன்ற உறுப்பினர்கள் அ.சௌந்தரபாண்டியன் (இலால்குடி), செ.ஸ்டாலின்குமார் (துறையூர்), பி.அப்துல் சமது (மணப்பாறை), டாக்டர் வி.முத்துராஜ் (புதுக்கோட்டை). எம்.சின்னத்துரை (கந்தர்வகோட்டை), எம்.பிரபாகரன் (பெரம்பலூர்), கே.சின்னப்பா (அரியலூர்). க.சொ.க.கண்ணன் (ஜெயங்கொண்டம்) மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:

#trichynewstoday #trichynewstamil #trichynewspapertoday #trichynewslivetoday #trichynews #இன்றையசெய்திகள்திருச்சி #இன்றையசெய்திகள்திருச்சிதமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடுமாவட்டங்கள் #indrayaseithigaltrichy #todaynewstrichy #todaynewstamilnadu #todaytamilnadunews #indrayaseithigaltrichytamilnadu #indrayaseithigaltamilnadumavattangal #TheGreatIndiaNews #Tginews #news #news
Comments & Conversations - 0