• முகப்பு
  • district
  • கும்பகோணம், கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்றம் 3 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் காலை 7 மணி முதல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு.

கும்பகோணம், கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்றம் 3 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் காலை 7 மணி முதல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நடைபெற்றது. கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்றத்துக்கு 3 வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு இன்று காலை 7 மணி முதல் இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. 3வது வார்டு உறுப்பினர் பதவிக்கு திமுகவைச் சேர்ந்த பிரியாவும், அதிமுகவைச் சேர்ந்த அன்னலட்சுமி என்பவரும் போட்டியிடுகின்றனர். இதில் 248 வாக்குகள் உள்ளது. கிருஷ்ணாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தேர்தல் நடைபெறுகிறது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குச்சாவடியில் காலை 9 மணி நிலவரப்படி 99 வாக்குகள் பதிவாகியுள்ளன. மேலும் இங்கு எந்தவித அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended