பொன்னேரி அருகே வேலூர் கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு ஶ்ரீதர்மராஜா திருக்கோவில் கும்பாபிஷேக விழா.
L.குமார்
UPDATED: May 14, 2023, 8:49:14 AM
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே வேலூர் கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு ஶ்ரீ தர்மராஜா திருக்கோவிலில் இன்று 14.5.2023 கும்பாபிஷேக விழாவானது நடைபெற்றது.
தர்மராஜா திரோபதி அம்மன் கிருஷ்ணன் விநாயகர் நகுலன் சகாதேவன் அர்ஜூனன் பீமன் உள்ளிட்ட மகாபாரத இதிகாச தெய்வங்களுக்கு கும்பாபிஷேக விழாவானது நடைபெற்றது.
யாக கலச பூஜைகளுடன் புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட கலச நீர் கொண்டு கோபுர கலசங்களுக்கும், சாமி சிலைகளுக்கும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு பின்னர் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.