• முகப்பு
  • district
  • சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக பொறுப்பேற்கவுள்ள குமரேஷ் பாபு அவர்கள் காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தின் விஷேச அபிஷேகத்தில் கலந்து கொண்டார்.

சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக பொறுப்பேற்கவுள்ள குமரேஷ் பாபு அவர்கள் காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தின் விஷேச அபிஷேகத்தில் கலந்து கொண்டார்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

2021 ஆம் ஆண்டு நீதிமன்றத்தால் அனுப்பப்பட்ட ஆறு பெயர்கள் பட்டியலில் பிப்ரவரி 16, 2022 அன்று உச்ச நீதிமன்ற கொலீஜியத்தால் கூடுதல் நீதிபதிகளாக வக்கீல்கள் சுந்தர் மோகன் மற்றும் கே.குமரேஷ் பாபு ஆகியோரின் பெயர்களை மத்திய சட்ட அமைச்சகம் அனுமதித்துள்ள நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் இருவரும் புதிய நீதிபதிகளாக வருகின்ற திங்கள்கிழமை அன்று பரிந்துரை செய்யப்பட உள்ளனர். அதனைத் தொடர்ந்து, காஞ்சிபுரத்தில் மிக பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற விசேஷ பூஜையில் கே.குமரேஷ் பாபு அவர்கள் கலந்துகொண்டு காமாட்சி அம்மனின் ஆசி பெற்றார். இந்நிகழ்ச்சியில் காமாட்சி அம்மன் ஆலயத்தின் மூத்த ஸ்தானிகர் நடராஜ சாஸ்திரிகள் பூ ,பழங்கள் அளித்து மரியாதை செலுத்தினார். காஞ்சிபுரம் செய்தியாளர் லட்சுமிகாந்த்

VIDEOS

RELATED NEWS

Recommended