• முகப்பு
  • குற்றம்
  • குமரஞ்சேரி அருள்மிகு குமாரசாமி திருக்கோயிலில் கடப்பாரையால் பூட்டை உடைத்து திருடன்கள் அட்டூழியம்

குமரஞ்சேரி அருள்மிகு குமாரசாமி திருக்கோயிலில் கடப்பாரையால் பூட்டை உடைத்து திருடன்கள் அட்டூழியம்

L.குமார்

UPDATED: May 21, 2023, 10:32:42 AM

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே குமரஞ்சேரி கிராமத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு குமாரசாமி திருக்கோயில் அமைந்துள்ளது.

முருகப்பெருமானின் முக்கியஸ்தலங்களுல் ஒன்றாகிய இத்திருக்கோயிலில் நேற்று இரவு மர்ம நபர்கள் கடப்பாரையால் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து அங்கிருந்து உண்டியலையும் உடைத்து உண்டியலில் இருந்த பதினைந்தாயிரம் ரொக்கப் பணத்தையும் எடுத்துக்கொண்டு மேலும் கோயிலில் உள்ளிருந்த பீரோக்களை உடைத்து அதிலிருந்து 2000 ரூபாய் எடுத்துக் கொண்டு தப்பி சென்றுள்ளனர்.

காலையில் கோயில் குருக்கள் ஆலயத்தை சென்று பார்த்தபோது அதிர்ச்சி அடைந்து கிராம பொது மக்களை அழைத்து தகவல் தெரிவித்து கும்மிடிப்பூண்டி காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்,

அதன் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended