Author: THE GREAT INDIA NEWS

Category: crime

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அதிமுகவின் வர்த்தக அணி மாநில தலைவர் சஜீவனிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை பி.ஆர்.எஸ். மைதானத்தில் உள்ள அலுவலகத்தில் ஐ.ஜி. சுதாகர் தலைமையில் இந்த விசாரணை நடைபெறுகிறது. அதிமுக வர்த்தக அணி மாநில தலைவர் சஜீவன் பதவி வகித்துவருகிறார். இவர் கொடநாடு பங்களாவின் உள் அரங்க வேலைபாடுகள் செய்து கொடுத்து வந்த நிலையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் அதிமுகவில் பதவி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி நள்ளிரவில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு நடைபெற்றது. இந்த சம்பவம் நடைபெற்ற சிலமணி நேரத்தில் கேரள எல்லையில் காரில் சென்ற இருவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த இருவரை விடுவிக்க காவல் நிலையத்திற்கு சென்றவர் சுனில். சுனிலின் சகோதரரான சஜீவன் மீது தொடக்கத்திலிருந்தே இந்த வழக்கில் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது. தற்போது இவரிடம் நடத்தப்படும் விசாரணை வழக்கில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. இன்றைய செய்திகள் தமிழ்நாடு மாவட்டங்கள்,இன்றைய செய்திகள் கொடநாடு தமிழ்நாடு,இன்றைய செய்திகள் கொடநாடு தமிழ்நாடு,இன்றைய முக்கிய செய்திகள் தமிழ்நாடு,tamil news live tv,latest news in tamilnadu tamil,tamil news channel,tamil news flash,tamil news daily,kodanadu estate,murder,crime news,Kodanadu case! AIADMK leader Sajeevan to be questioned by police,jayalalitha

Tags:

Comments & Conversations - 0