குடும்ப தகராறில் மனைவியை சம்மட்டியால் அடித்து கொலை.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கரிமலைப்பாடி பகுதியைச் சார்ந்த விஜி என்பவர் தனது மனைவி செல்வியின் நடத்தையில் சந்தேகம் அடைந்து நேற்று இரவு ஏற்பட்ட குடும்ப தகராறில் மனைவியை சம்மட்டியால் அடித்து கொலை செய்துவிட்டு மேல்செங்கம் காவல் நிலையத்தில் சரண்அடைந்தார்.
இதனைத் தொடர்ந்து கொலைக்கு உடந்தையாக இருந்த மேலும் நான்கு பேரை கைது செய்ய கோரியும் இறந்த பெண்ணின் உடலை தங்களிடம் ஒப்படைக்கும் வேண்டும் எனவும் பெண்ணின் உறவினர்கள் பெங்களூர் - திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் மேல்செங்கம் சோதனை சாவடி அருகே சாலை மறியல் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் போக்குவரத்து சுமார் ஒரு மணி நேரம் பாதிப்பு.