• முகப்பு
  • tamilnadu
  • பேருந்து பணியாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு.

பேருந்து பணியாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

ஓட்டுநர்களுக்கும் நடத்துனர்களுக்கும் போக்குவரத்துத்துறை உத்தரவு . உரிய பேருந்து நிறுத்தங்களில் பேருந்துகளை நிறுத்த வேண்டும் பேருந்து நிறுத்தத்தை விட்டு பேருந்தை தள்ளி நிறுத்துவதால், பயணிகள் சிரமம் அடைகின்றனர். நோயாளிகள், வயதானோர், மாற்றுத்திறனாளிகள் , கர்ப்பினிகள் போன்றோர்களால் ஓடி பிடித்து பேருந்தில் ஏற இயலாது. பயணிகள் கீழே விழுந்து காயம் ஏற்படும் சூழ்நிலையும், சில நேரங்களில் மரணவிபத்தும் ஏற்பட ஏதுவாகிறது. அனைத்து ஓட்டுநர், நடத்துநர்களும் உரிய பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி, இறக்கிவிட உத்தரவு இடப்பட்டுள்ளது. மேலும், பேருந்தை சாலையின் நடுவில் பிற வாகனங்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் நிறுத்தக் கூடாது. இவ்வாறு பேருந்து பணியாளர்களுக்கு போக்குவரத்து துறை சார்பாக ஆணை வெளியிடப்பட்டு உள்ளது. செய்தியாளர் பா. கணேசன்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended