Author: ராஜ்குமார்

Category: குற்றம்

தென்காசி பஸ் ஸ்டாண்டில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அங்கு 3 பெண்களுடன் வந்த 3 பேர் அவரை விபசாரத்திற்கு அழைத்ததாக கூறப்படுகிறது.  

இதுகுறித்து உடனடியாக அவர் தென்காசி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் அங்கு சென்று 6 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.  

விசாரணையில், அவர்கள் செங்கோட்டை மேலூர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த பீர் முகமது மகன் முஸ்தபா கமால் (31), திருச்சி கரிக்கோல் மேடு வடக்கு தெருவை சேர்ந்த சேகர் மகன் மோகன் (29), தென்காசி தெற்கு கடைய தெருவைச் சேர்ந்த அன்வர் அலி (40) என்பதும், அவர்களுடன் சென்னையைச் சேர்ந்த 3 பெண்கள் விபசாரத்திற்காக அழைத்து வந்ததும் தெரிய வந்தது.  

இதையடுத்து முஸ்தபா கமால் உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். 3 பெண்களையும் மீட்டு தென்காசியை அடுத்த மேலகரத்தில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

இரவு நேரங்களில் தென்காசி புதிய பஸ்நிலையம் பகுதியில் இதுபோன்று சமூக விரோத செயல்களில் ஈடுபடும் கும்பல் சுற்றி வருவதாக கூறப்படுகிறது.

எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், இதுகுறித்த தகவல்கள் இருந்தால் தென்காசி போலீசாருக்கு 04633 -222278 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

Tags:

#thenkasinews , #thenkasinewstodaylive, #thenkasinewstodayinenglish #prostitute #thenkasinewsintamil #thenkasinewstoday #thenkasinewsintamiltoday #thenkasitodaynewsintamil #surandainews #surandaitodaynews
Comments & Conversations - 0