ஸ்ரீமுஷ்ணம் அருகே வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காமக்கொடூரன்.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே வெய்யலூர் கிராமத்தில் தனியாக இருந்த சிறுமிக்கு அதே கிராமத்தை சேர்ந்த திருமணமான வாலிபர் ரத்தினவேலு என்பவர் குடிக்க தண்ணீர் கேட்பது போல் நடித்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளான்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி தனது தாய், தந்தையரிடம் இதனை
தெரிவித்தார்.இது குறித்து சிறுமியின் குடும்பத்தினர் சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரத்தினவேலுவை போக்சோவில் வழக்கு பதிந்து கைது செய்து அவனை சிறையில் அடைத்தனர்.
ஸ்ரீமுஷ்ணம் செய்தியாளர் சண்முகம்.