காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஆட்சியர் ஆக பொறுப்பேற்றார் கலைச்செல்வி மோகன்.

லட்சுமி காந்த்

UPDATED: May 25, 2023, 8:43:53 AM

காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஆட்சியராக இருந்த டாக்டர் மா ஆர்த்தி கடந்த 16ஆம் தேதி அனைவருக்கும் கல்வித் திட்டம் இயக்குனர் மாற்றம் செய்யப்பட்டு, புதிய மாவட்ட ஆட்சியராக நில அளவைத் துறை கூடுதல் இயக்குனராக இருந்த கலைச்செல்வி மோகன் நியமிக்கப்பட்டார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்ட கலைச்செல்வி மோகன் இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்று அரசு கோப்புகளில் கையெழுத்திட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் அனைத்து தரப்பு மக்களுக்கும் அரசின் நலத்திட்டங்களை சென்றடைய பாடுபடுவேன் என தெரிவித்தார்.

புதிய மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற கலைச்செல்வி மோகன் மரியாதை நிமித்தமாக பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended