• முகப்பு
  • அரசியல்
  • கள்ள சாராயம் விஷயத்தில் நிவாரணம் வழங்குவது மனிதாபிமான செயல்.இதில் பாரபட்சம் காட்டுவது கூடாது. கள்ள சாராய விற்றவர் குடும்பத்துக்கும் நிவாரணம்.

கள்ள சாராயம் விஷயத்தில் நிவாரணம் வழங்குவது மனிதாபிமான செயல்.இதில் பாரபட்சம் காட்டுவது கூடாது. கள்ள சாராய விற்றவர் குடும்பத்துக்கும் நிவாரணம்.

ஆர்.தீனயாளன்

UPDATED: May 17, 2023, 9:01:23 PM

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர் தங்கும் அறையினை சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் திறந்து வைத்தார் அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் .

அப்போது, எத்தனால், மெத்தனால் பயன்படுத்துவர்கள் குறித்து முறையாக கணக்கெடுக்கும் பணி மாவட்ட ஆட்சியர் மூலம் நடைபெற்று வருகிறது என்றும்,

யார் யார் எத்தனால் மெத்தனால் வாங்கி உள்ளார்கள் அவர்கள் எதற்காக அதனை பயன்படுத்தி உள்ளார்கள் என்ற விவரத்தினை மாவட்ட ஆட்சியர்கள் பெற்று வருகிறார்கள் என்றும் யாராவது முறைகேடாக அதை பயன்படுத்தியது தெரிய வந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

ஒரு கிராமத்தில் கள்ள சாராயம் குடித்து 70க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் ,அந்த ஊரில் உள்ள மற்றவர்களுக்கு இது குறித்து முன்னரே தகவல் தெரிந்திருக்கும் .ஆனால் யாரும் தகவல் தெரிவிக்கவில்லை .

இளைய சமுதாயத்தினர் கள்ள சாராயம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர், காவல் துறையினருக்கு தகவல் தருவது நல்லது என அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கஜா புயல் தாக்கிய போது அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உடனடியாக பாதிக்கப்பட்ட இடத்திற்கு வந்தாரா?

கடந்த 10 ஆண்டுகளில் எத்தனையோ சம்பவங்கள் நடைபெற்று இருக்கு பாதிக்கப்பட்ட இடத்திற்கு உடனடியாக எடப்பாடி பழனிச்சாமி சென்றாரா?

கள்ள சாராயம் விஷயத்தில் தமிழக முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் கூறுவது நியாயமற்றது .

கும்பகோணம் மகாமக குளத்தில் ஜெயலலிதா புனித நீராடலின் போது பலர் உயிரிழந்தனர். அப்போது ஜெயலலிதா ராஜினாமா செய்தாரா?

அதிமுக ஆட்சிக்காலத்தில் பல்வேறு பிரச்சனைகள் வந்த போது எடப்பாடி பழனிச்சாமி ராஜினாமா செய்தாரா? என மா சுப்பிரமணியன் கேள்வி எழுப்பினார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் மருத்துவ துறையில் 8000 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது என்றும், இன்னும் பத்து நாட்களில் 1200 மருத்துவர்கள் பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள் அதற்கான தேர்வு முடிவுகள் இன்னும் 10 நாட்களில் வெளியாக உள்ளது என்றும் பார்மசிஸ்ட் பணியிடங்களுக்கு நடைபெற்ற தேர்வு இன்னும் பத்து நாட்களில் வெளியாக உள்ளது.

முடிவு வெளியானவுடன் 900பணியிடம் நிரப்பப்படும் என்றும், கடந்த இரண்டு ஆண்டுகளில் மருத்துவ துறையில் 8000 நபர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்றும், கொரோனா காலகட்டத்தில் செவிலியர்களாக பணியாற்றிய 2000 நபர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்றும், மா சுப்பிரமணியன் மேலும் தெரிவித்தார்.

VIDEOS

RELATED NEWS

Recommended