வாரணாசியில் உள்ள மசூதிக்கு சீல் வைக்கப்பட்டததை கண்டித்து இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம் .
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற மசூதிக்கு சீல் வைக்கப்பட்டது.
அங்குள்ள பாரதிய ஜனதா அரசு நீதித் துறையை கையில் வைத்துக்கொண்டு இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் , நீதித்துறை நடுநிலையோடு இருக்க வேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்து சீல் வைக்கப்பட்ட மசூதி மீண்டும் இஸ்லாமியர்கள் தொழுகைக்காக திறக்க வேண்டும் என வலியுறுத்தி கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் 100க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராகவும் உத்தரபிரதேச அரசுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர் மேலும் ஆர்எஸ்எஸ் மற்றும் இந்துத்துவ அமைப்புகளின் உத்தரவின்படி நீதித்துறை செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் குற்றம்சாட்டினர்.