நித்தியானந்தா உடல் நிலை பாதிக்கப் பட்டு, மரண மடைந்துவிட்டதாக பரவிய தகவல் உண்மையா ?
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
இந்தியாவிலிருந்து வெளியேறி கைலாசா தீவில் தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படும், நித்தியானந்தா உடல் நிலை பாதிக்கப் பட்டு, மரண மடைந்துவிட்டதாகதகவல் பரவியநிலையில், நித்யானந்தா விளக்கம் அளித்து உள்ளார்.
நித்யானந்தா நோய் வாய்ப்பட்டு மரணமடைந்துவிட்டதாகவும், சமூக ஊடகங்களில் அவர் சொற்பொழிவாற்றுவதாக பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்கள், அவருடைய ஆதரவாளர்களால் ஏற்கெனவே பதிவு செய்யப் பட்டவை என்று சமூக ஊடகங்களில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
நித்யானந்தா இறந்துவிட்டாரா என்று நெட்டிசன்கள் பலரும்கேள்வி எழுப்பிய நிலையில், நித்யானந்தா நேரில்தோன்றி விளக்கம் அளித்துள்ளார். அதில், நித்யானந்தா முன்பைப்போல இல்லை. உடல்மெலிந்து காணப் படுகிறார்.
அவருக்கு உடல் நிலை சரி இல்லை என்பது தெரிகிறது. நித்யானந்தா அந்த வீடியோவில், '27 மருத்துவர்கள் எனக்குசிகிச்சை அளிக்கிறார்கள். மருத்துவ சிகிச்சையிலிருந்து நான் இன்னும்வெளியே வரவில்லை.
பிரபஞ்சத்தின் சக்தியை என் உடல் எப்படி உள் வாங்கிசெயல்படுகிறது என்பதை எனக்குசிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் ஆய்வு செய்கிறார்கள். தினந்தோறும்நடைபெறும் நித்யபூஜை மட்டும் இன்னும் நிற்கவில்லை.
மற்றபடி, வேறு எந்த வேலையையும் நான் செய்வதில்லை. உணவு உண்ணமுடியவில்லை, தூங்கமுடியவில்லை. என் உடம்புக்கு என்னானது என்றேதெரியவில்லை.
மருத்துவர்களாலும் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. எனக்கு அறிமுகமானவர்களைக் கூட அடையாளம் கண்டுக் கொள்வதில் சிரமப் படுகிறேன். நான்சாகவில்லை. ஆனால், சமாதிமனநிலையை அடைந்திருக்கிறேன். விரைவிலேயே பரிபூரணநலம் பெற்றுதிரும்புவேன்' என்று கூறியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து, நித்யானந்தா, மே 11 ஆம் தேதியை எழுதி திரும்பவந்துட்டேன்னு சொல்லு என்ற குறிப்பு எழுதிவெளியிட்டிருக்கிறார். இதனால், நித்யானந்தாவுக்கு என்ன ஆனது, அவருடைய உடல் நிலை எப்படி இருக்கிறது என்றுசமூக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.
செய்தியாளர் பா. கணேசன்.