Author: THE GREAT INDIA NEWS

Category: tamilnadu

சென்னையில் குளிர் பானம் குடித்து, பானி பூரி சாப்பிட்ட பதினோரு வயதுசிறுவன் உயிரிழப்பு. சென்னை கண்ணகி நகரில் குளிர் பானம் குடித்து பானி பூரி சாப்பிட்ட பதினோரு வயதுசிறுவனுக்கு சிறிதுநேரத்தில் வலிப்புஏற்பட்டு மருத்துவ மனைக்கு கொண்டுசென்ற போது உயிரிழந்த சம்பவம் பெரும்சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை கண்ணகிநகரை சேர்ந்தவர் மணிகண்டன், இவர்மனைவி திவ்யா, இவர்களுக்கு யுவராஜ் (வயது12) வசந்தகுமார் (வயது11), ஈஸ்வரன் (வயது8) ஆகிய முன்று ஆண்பிள்ளைகள் உள்ளனர். இதில் வசந்த குமார் துரைப் பாக்கதில் உள்ள அரசுபள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்துவருகிறார். அவரின் அண்ணன், தம்பி மற்றும் உறவினர் மகன் ஆகியோருடன் வீட்டினருகே விளையாடிக்கொண்டிருந்த வசந்தகுமார், அங்குள்ள பெட்டிக் கடையில் பெத்தராஜ் என்பவரிடம் ஐந்து ரூபாய்க்கு சாக்லேட் மில்க் வாங்கி குடித்து உள்ளான், அதனை தொடர்ந்து சாலை யோரம் இருந்த கடையில் பானி பூரியும் வாங்கி சாப்பிட்டநிலையில் வீட்டருகே வந்த போது வலிப்பு ஏற்பட்டது. இதனால் அக்கம் பக்கதினர், சிறுவனைமீட்டு ஈஞ்சம் பாக்கத்தில் உள்ள அரசுநகர்ப்புற மருத்துவ மனைக்கு அனுப்பி உள்ளனர். அங்கு வசந்த குமாரை சோதித்தமருத்துவர்கள் உயிரிழந்தாக கூறியதையடுத்து கண்ணகி நகர் போலீசார் பிரேதத்தை கைப் பற்றி உடற் கூறு ஆய்வுகாக ராய பேட்டை அரசுமருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில் பெட்டி கடைக்காரர் பெத்தராஜ் உள்ளிட்டநபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரும் உயிரிழந்தசிறுவன் மரணத்திற்குகாரணம் குளிர்பானமா, பானி பூரியா, அல்லது இரண்டும் சேர்ந்ததால் நச்சுத் தன்மை ஏற்பட்டதா வேறு காரணம் என்ன என பிரேத பரிசோதனையில் மருத்துவரிடம்கேள்வி எழுப்பி உள்ளனர். செய்தியாளர் பா. கணேசன்

Tags:

#இன்றையசெய்திகள்தமிழ்நாடு #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழகம் #நகராட்சி #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #tamilnadunewstodaytamil #tamilnaduflashnewstamil #corporation
Comments & Conversations - 0