வந்தவாசி அரசு மருத்துவமனையில் சர்வதேச யோகா தினம் அனுசரிப்பு.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் யோகா தினம் அனுசரிக்கப்பட்டது.
இதில் மருத்துவ அலுவலர் சிவப்பிரியா தலைமையில் மருத்துவர்கள் செவிலியர்கள் மருத்துவமனை ஊழியர்கள் ஒரு மணி நேரம் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.
தடாசனம், கட்டி சக்கராசனம், பாதஹஸ்தாசனம், பச்சிமோத்தாசனம், வக்ராசனம் மற்றும் மூச்சு பயிற்சி போன்ற ஆசனங்களை செய்தனர்.
யோகா மற்றும் இயற்கை மருத்துவர் முகமதுஅர்கம் யோகா பயிற்சி அளித்தார். இதில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
வந்தவாசி செய்தியாளர் அகிலன் சுப்பிரமணியன்.