- முகப்பு
- மாவட்டச் செய்தி
- சத்தியமங்கலம் பகுதியில் தெருவில் ஓடும் பொதுக்கழிப்பிட கழிவு நீரால் தொற்று நோய் பரவும் அபாயம்.
சத்தியமங்கலம் பகுதியில் தெருவில் ஓடும் பொதுக்கழிப்பிட கழிவு நீரால் தொற்று நோய் பரவும் அபாயம்.
TGI
UPDATED: Mar 31, 2023, 12:56:51 PM
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகராட்சிக்குட்பட்ட அத்தாணி ரோடு பகுதியில் காசிக்காடு செல்லும் வழியில் நகராட்சி சார்பில் கடந்த 2016ல் துாய்மை இந்தியா திட்டத்தில் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பொதுக்கழிப்பிடம் கட்டப்பட்டது.
தற்போது கழிவுகள் தேங்கும் செப்டிக் டேங் நிரம்பி பலநாட்களாக கழிவு நீர் சாலையில் ஆறாக ஓடுகிறது. இதனால் அவ்வழியே செல்லும் பொதுமக்கள் முகம் சுழித்து செல்கின்றனர்.
மேலும் கழிவு நீர் கடும் துர்நாற்றத்துடன் சாலையில் செல்வதால் பல்வேறு தொற்று நோய்கள் பரவும் சூழலில் உள்ளது.
எனவே நகராட்சி அலுவலர்கள் கழிவு நீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.