- முகப்பு
- உக்ரைனில் இருந்து இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், அண்டை நாடுகள் வழியாக விரைவில் அனைவர?
உக்ரைனில் இருந்து இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், அண்டை நாடுகள் வழியாக விரைவில் அனைவர?
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
இன்று செய்தியாளர்களிடம் பேசிய பியூஸ் கோயல், உக்ரைனில் நிலைமை மோசமடையத் தொடங்கிய உடனேயே அந்நாட்டை விட்டு வெளியேற இந்திய அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டதாகவும், அதை ஏற்று போர் தொடங்குவதற்கு முன்பே நான்காயிரம் இந்தியர்கள் உக்ரைனை விட்டு வெளியேறி விட்டதாகவும் கூறினார்.
மாணவர்கள் இந்தியாவின் அறிவுறுத்தலை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லையா? அல்லது அவர்கள் வெளியேற பல்கலை கழகங்கள் அனுமதிக்கவில்லையா? எதனால் மாணவர்கள் வெளியேறவில்லை எனத் தெரியவில்லை என்று கூறிய பியூஸ் கோயல், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் உண்மையை திரித்து மத்திய அரசை குறைகூறி வருவதாகவும் குற்றம் சாட்டினார்.