இலங்கைக்கு இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஒரு நாள் அரசு முறை பயண விவரம்.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23 ஆம் திகதி இலங்கைக்கு ஒரு நாள் விஜயத்தை மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் குவாத்ரா வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தனவை வெளிவிவகார அமைச்சில் சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது, இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான சிறந்த இருதரப்பு உறவுகள் தொடர்பில் இந்தியா மற்றும் இலங்கையின் வெளிவிவகார செயலாளர்கள் சுமுகமாக கலந்துரையாடினர்.
இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலை குறித்தும் கலந்துரையாடினர். தற்போதைய பொருளாதார சவால்களை சமாளிக்க இந்தியா இலங்கைக்கு அளித்து வரும் ஆதரவு மற்றும் உதவிகளுக்கு வெளியுறவுச் செயலாளர் விஜேவர்தன தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
இந்திய வெளியுறவு செயலாளருடன், இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் இணைச் செயலர் கார்த்திக் பாண்டே ஆகியோர் உடனிருந்தனர்.
மேலதிக செயலாளர் தெற்காசியா பி.காண்டீபன், தெற்காசிய பணிப்பாளர் நாயகம் டபிள்யூ.தர்மபால, இலங்கை வெளிவிவகார அமைச்சின் பொருளாதார அலுவல்கள் பணிப்பாளர் நாயகம் சந்தன வீரசேன ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இலங்கை செய்தியாளர் அஹ்மத் அஸ்ஜத்