• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • திருவேற்காடு நகராட்சியில் வார்டு 1,2,3 மற்றும் 4, ல் தினமும் இரவில் ஐந்தாறு மணி நேரம் தொடர்ந்து மின் தடை ஏற்படுகிறது.

திருவேற்காடு நகராட்சியில் வார்டு 1,2,3 மற்றும் 4, ல் தினமும் இரவில் ஐந்தாறு மணி நேரம் தொடர்ந்து மின் தடை ஏற்படுகிறது.

கணேசன்

UPDATED: May 29, 2023, 4:21:36 PM

திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி வட்டத்தில் உள்ள திருவேற்காடு நகராட்சியில் வார்டு 1,2,3 மற்றும் 4, ல் தினமும் இரவில் ஐந்தாறு மணி நேரம் தொடர்ந்து மின் தடை ஏற்படுகிறது.

மேலும் சுந்தர விநாயகர் நகர் பகுதியில் விஷ ஜந்துக்கள் அதிகம். 

ஏற்கனவே இப்பகுதி மக்கள் பாதாள சாக்கடை கோரிக்கை வைத்தனர் அதுவும் கிடப்பில் போடப்பட்டு விட்டது.

அரசு அலுவலர்கள் ஏன் கவனிப்பதில்லை என்றும் ஓய்வூதியம் போன்ற அவர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்றாததால் தான் மின் துறை ஊழியர்கள் சரியாக பணி செய்வதில்லை என பொது மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

அதாவது பொதுவாகவே அரசு ஊழியர்களை திமுக அரசு நம்பவைத்து ஏமாற்றியதாகவும் அதனால் திமுகவின் பெயரை கெடுக்க வேண்டுமென்றே ஊழியர்கள் சரியாக பணி புரிவதில்லை எனவும் பொது மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

நம்ம தொகுதி எம்எல்ஏ யார் எம்பி யார் என்றும் தேடுகிறார்கள்.

வாக்கு கேட்க கூட இந்த பகுதிக்கு அவர்கள் வருவதில்லையாம்.

எனவே வரும் தேர்தலில் பார்த்துக்கொள்கிறோம் என கூறுகின்றனர் அப்பகுதி மக்கள்.

VIDEOS

RELATED NEWS

Recommended