• முகப்பு
  • crime
  • காதல் திருமணம் முடித்த ஐந்து நாட்களில் இளம் தம்பதியினர், கொடூரமாக ஓட ஓட விரட்டி படுகொலை

காதல் திருமணம் முடித்த ஐந்து நாட்களில் இளம் தம்பதியினர், கொடூரமாக ஓட ஓட விரட்டி படுகொலை

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கும்பகோணம் அருகே சோழபுரம் துலுக்வேலியை சேர்ந்த சேகர் தேன்மொழி தம்பதியினர் (தாழ்த்தப்பட்ட வகுப்பினர்) இவர்களுக்கு சக்திவேல் சதீஷ் மற்றும் சரவணன் ஆகிய மூன்று மகன்களும், சரண்யா (23) என்ற மகளும் உள்ளார் தந்தை சேகர் கொத்தனாராக உள்ளார், மூத்த மகன் சக்திவேல் கொத்தனாராகவுள்ளார், மற்ற இரு மகன்கள் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர், மூன்று மகன்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது . ஒரே மகளான சரண்யா நர்சிங் படித்து விட்டு சென்னையில் கடந்த 4 ஆண்டுகளாக தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்துள்ளார். இதற்கிடையே, சரண்யாவின் தாயார் தேன்மொழிக்கு உடல் நல குறைவு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். அப்போது அதே மருத்துவமனையில் ஸ்ரீபெரும்புதூர், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் திருவண்ணாமலை மாவட்டம் பொன்னூர் சின்னத்தெருவை சேர்ந்த (செங்குந்த முதலியார் வகுப்பை சேர்ந்த) மோகன் (26) என்பவரின் தாயாரின் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்து போது, சரண்யாவிற்கும் மோகனுக்கும் காதல் அரும்பியுள்ளது. இருவரது தாயார்களும், சிகிச்சை முடிந்து அவரவர் வீடு திரும்பிய போதும், காதலர்கள் இருவர் மட்டும் அலைபேசி வழியாக தொடர்பு கொண்டு பேசி தங்களது காதலை வளர்த்துள்ளனர் கடந்த 5 நாட்களுக்கு முன்னர் சரண்யாவும், மோகனும் சென்னையில் காதல் திருமணம் செய்துள்ளனர் திருமணமான காதல் ஜோடியினர் இன்று காலை சோழபுரம் துலுக்கவேலியில் உள்ள சரண்யா வீட்டிற்கு வந்துள்ளனர் பின்னர் நண்பகல் உணவிற்கு பிறகு, மீண்டும் சென்னை செல்ல இருந்த நிலையில், காதல் திருமணம் செய்ததால் ஆத்திரத்தில் இருந்த சரண்யாவின் அண்ணன் சக்திவேல், சக்திவேலின் மைத்துனர் ரஞ்சித் ஆகிய இருவரும், காதல் தம்பதியர் வீட்டிற்கு வெளியே வந்தபோது, வீட்டின் கதவை வெளிப்பக்கமாக தாளிட்ட பிறகு, அரிவாளை எடுத்துக் கொண்டு மோகனை வெட்டுவதற்காக விரட்டும் போது, அவர் ஓட ஓட விரட்டிச் சென்று படுகொலை செய்தனர். தொடர்ந்து சரண்யாவும் தப்பியோட அவரையும் விரட்டிச் சென்று படுகொலை செய்தனர் இது குறித்து தகவல் அறிந்த சோழபுரம் போலீசார் இருவரது உடல்களையும் கைப்பற்றி வழக்கு பதிவு செய்து உடற்கூறு ஆய்விற்காக கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவயிடத்திற்கு தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிப்ரியா டிஎஸ்பிக்கள் கும்பகோணம் அசோகன், திருவிடைமருதூர் வெற்றிவேந்தன் ஆகியோர் விரைந்து வந்து ஆய்வு செய்தனர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காவல் கண்காணிப்பாளர், இப்படுகொலைகள் குடும்ப பிரச்சனை காரணமாக நடந்துள்ளது, படுகொலை குறித்து நேரடி சாட்சியங்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது, இப்படுகொலை தொடர்புடைய சக்திவேல் மற்றும் ரஞ்சித் ஆகிய இருவரும் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளதால் அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. கும்பகோணம் செய்தியாளர் ரமேஷ்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended