• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • நாகர்கோவில் மேலபெருவிளை பகுதியில் சாலை பழுதாகி கற்கள் சிதறிகிடப்பதால் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து கை கால் முறிவு ஏற்படும் அவல நிலை.

நாகர்கோவில் மேலபெருவிளை பகுதியில் சாலை பழுதாகி கற்கள் சிதறிகிடப்பதால் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து கை கால் முறிவு ஏற்படும் அவல நிலை.

குமரி ஒற்றன்

UPDATED: May 31, 2023, 10:06:54 AM

கன்னியாகுமாரி மாவட்டம் : நாகர்கோவில் மாநகராட்சி 3 வது வார்டுக்குட்பட்டது மேலபெருவிளை, இப்பகுதியில் உள்ள சிவன் கோயில் முதல் வெள்ளைமண் ஓடை வரையிலான புதிய சாலை பணிகளுக்காக சாலையை பெயர்த்து போடப்பட்டு பல நாட்களாகியும் சாலை பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.

இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

அந்தசாலையில் கற்கள் சிதறிகிடப்பதால் இருசக்கர வாகனங்களில் வரும் பொதுமக்கள் கீழே விழுந்து கைகால் முறியும் அவலநிலை உள்ளாகி வருகின்றனர்.

ஒப்பந்ததாரர்கள் பணியை முறையாக செய்யாமல் காலம் தாழ்த்துவதால் பொதுமக்கள் அவதிபடுகின்றனர்.

இதனை மாநகராட்சி நிர்வாகம் பார்வையிட்டு உடனடியாக சாலை பணிகளை முடித்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended