சிதம்பரத்தில் நகராட்சியின் சார்பில் பொது மக்களுக்கு நேரத்தை காட்டும் சங்கு சத்தம் துவக்கி வைக்கப்பட்டது .
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அக்காலத்தில் கடிகாரங்கள் இல்லாத நாட்களில் கோயில் மணியோசை மற்றும் காலையில் 6 மணிக்கு சங்கு ஊதும் மதியம் 1 மணிக்கு , 5 மணிக்கு, இரவு 9 மணிக்கு சங்கு ஊதும் இதை வைத்து பொதுமக்கள் நேரத்தை தெரிந்து கொள்வார்கள் .
சுமார் நூறு ஆண்டுகளாக இது நடைமுறையில் இருந்து வந்தது, சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு இது நிறுத்தப்பட்டது மீண்டும் சிதம்பரம் நகராட்சி சார்பில் அது புதியதாக செப்பனிட்டு மீண்டும் அதை நடைமுறைக்கு கொண்டு வந்தார்கள்.
தொன்று தொட்டு நடந்துவரும் பழக்கங்களை மீண்டும் சிதம்பரம் நகராட்சியின் சார்பில் துவக்கி வைத்தது மகிழ்ச்சியாக காணப்படுகிறது.
ஸ்ரீமுஷ்ணம் செய்தியாளர் சண்முகம்.