ஐம்பொன் சிலை கண்டெடுப்பு !!
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
தேனி மாவட்டம், மீனாட்சிபுரம் கிராமப் புலம் 1ல்.திரு, கோபாலன் என்பவருக்குச் சொந்தமான புன்செய் நிலத்தில் உரிமையாளரான, சந்தனமாரியம்மாள் என்பவர் வேர்க்கடலை விதைத்துக் கொண்டு வந்துள்ளார்.
அப்பொழுது நிலத்தை உழவடை செய்யும் பொழுது ஐம்பொன் சிலை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது உடனே கிராம நிர்வாக அலுவலர் அவர்களுக்குத் தகவல் தெரியப்படுத்தி உள்ளார்கள்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கிராம நிர்வாக அலுவலர்கள், ரங்கசாமி அவர்களும், அமாவாசை அவர்களும் ஐம்பொன் சிலையைக் கைப்பற்றி உத்தமபாளையம் வட்டாட்சியர் அர்ச்சுணன் அவர்களிடம் ஒப்படைத்தார்கள்.
மண்டல துணை வட்டாட்சியர் கண்ணன் அவர்களிடம் சிலையை பாதுகாப்பு வைப்பு அறையில் பாதுகாப்பாக வைக்க வட்டாட்சியர் உத்தரவிட்டார்.
செய்தியாளர் MP. ஜீவா