• முகப்பு
  • chennai
  • பத்து ரூபாய் நாணயம் செலுத்தினால் மஞ்சப்பை.

பத்து ரூபாய் நாணயம் செலுத்தினால் மஞ்சப்பை.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தானியங்கி எந்திரம் மூலம் மஞ்சப்பை விற்பனை. 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை அரசு தடை விதித்துள்ளது. இதற்கு மாற்றாக துணிப்பை உபயோகிக்கும் பழக்கத்தை மக்களிடம் எடுத்துச் செல்ல 'மீண்டும் மஞ்சப்பை' திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் துவக்கிவைத்தார். இதன் தொடர்ச்சியாக சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட் வளாகத்தில் தானியங்கி இயந்திரம் மூலம் மஞ்சப்பை விற்பனை தொடங்கியது. இந்த மஞ்சப்பை பெற ரூபாய் 10 நாணயத்தை இயந்திரத்தில் செலுத்தினால் நமக்கு மஞ்சபை கிடைக்கும். இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. செய்தியாளர் பாஸ்கர்.

VIDEOS

RELATED NEWS

Recommended