- முகப்பு
- pondichery
- மத்திய அரசு திட்டங்களோடு மாநில அரசின் திட்டங்களையும் இணைந்து செயல்படுத்தினால் மக்களை முழுவதுமாக திருப்தி படுத்த இயலும் முதல்வர்.
மத்திய அரசு திட்டங்களோடு மாநில அரசின் திட்டங்களையும் இணைந்து செயல்படுத்தினால் மக்களை முழுவதுமாக திருப்தி படுத்த இயலும் முதல்வர்.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
மத்திய அரசின் பல்வேறு திட்டப் பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடும் நிகழ்ச்சி புதுச்சேரி அரசு சார்பில் கம்பன் கலையரங்கத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முதலமைச்சர் ரங்கசாமி பேசும்போது...
மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிப்படி செயல்படுத்தப்படும் திட்டங்கள் மக்களுக்கு சிறப்பாக சென்று சேருகின்றதா என்பதை ஆய்வு செய்கின்றதா என்பதை இந்நிகழ்ச்சியின் மூலம் உறுதி செய்யப்படுகின்றது.
மத்திய அரசின் மானியங்கள் வங்கிகள் மூலமாக பொதுமக்களுக்கு சென்று சேருகின்றதா என்பதை உறுதி செய்யப்படுகின்றது.
ஏழை எளிய மக்களுக்கு அரசின் சேவைகள் சென்று சேர வேண்டும் என்று பிரதமர் மோடி அனைத்து நலத்திட்டங்களையும் செயல்படுத்தி வருவதால் புதுவையும் பயன்பெருகின்றது என்பது நிரூபனமாகின்றது.
மத்திய அரசு திட்டங்களோடு மாநில அரசின் திட்டங்களையும் இணைந்து செயல்படுத்தினால் மக்களை முழுவதுமாக திருப்தி படுத்த இயலும் என்று முதல்வர் ரங்கசாமி பேசினார்.
பாண்டிச்சேரி செய்தியாளர் சக்திவேல்.