நானும் எடப்பாடி பழனிச்சாமியும் ஒன்றாக இணைந்து ஒற்றை தலைமை பற்றி பேசியவர்களை தண்டிப்போம் என்றார்.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
ஒற்றை தலைமை என்ற வார்த்தை எப்படி உருவானது என்று தெரியவில்லை என்று தனது மனவேதனையை முதன்முதலாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
மாவட்ட செயலாளர் மூர்த்தி ஒற்றை தலைமை பற்றி முதலில் கேள்வி எழுப்பினார் , அதனை வெளியே வந்து செய்தியாளர்களிடம் ஜெயக்குமார் தெரிவித்ததால் இந்த விஷயம் பூதாகரமானது.
பன்னீர்செல்வம் அவர்கள் எடப்பாடி பழனிச்சாமி இடம் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்
செயற்குழு கூட்டத்திற்கு முன் இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் எனவும் தெரிவித்தார்.
நானும் எடப்பாடிபழனிச்சாமியும் ஒன்றாக இணைந்து ஒற்றை தலைமை பற்றி பேசியவர்களை தண்டிப்போம் என்றார்.
தொண்டர்கள் யாரும் சோர்ந்து விட வேண்டாம் அனைவரும் பொறுமையுடன் இருக்கும்படி அறிவுறுத்தினார்.