• முகப்பு
  • குற்றம்
  • கும்மிடிப்பூண்டி அடுத்த பெரியார் நகர் அருகே வெள்ளை நிற பிளாஸ்டிக் பையில் மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு.

கும்மிடிப்பூண்டி அடுத்த பெரியார் நகர் அருகே வெள்ளை நிற பிளாஸ்டிக் பையில் மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு.

மகேஷ் குமார்

UPDATED: May 30, 2023, 7:25:51 PM

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, பெரியார் நகர் குடியிருப்பு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வரும் முனியாண்டி (43) என்பவரின் வீட்டின் பின்புறம் உள்ள முப்புதரில் வெள்ளை நிற பிளாஸ்டிக் பையில் சுற்றியபடி மனித மண்டை ஓடு இருப்பதாக கும்மிடிப்பூண்டி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

வரைந்து வந்த கும்மிடிப்பூண்டி போலீசார் முப்புதரின் உள்ளே இருக்கி கட்டப்பட்ட நிலையில் இருந்த மண்டை ஓடு மற்றும் சுமார் 18 வயது மதிக்கத்தக்க மனித உடலின் கை கால்களின் எலும்புகளை மீட்டனர். 

இந்த எலும்புகள் கொலை செய்து மாதக்கணக்கில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு யாருக்கும் தெரியாமல் திடீரென முட்புதரில் வீசப்பட்டதா அல்லது மாந்திரீகத்திற்காக நரபலி கொடுத்து அந்த எலும்புகள் யாருக்கும் தெரியாமல் முட்புதரில் வீசப்பட்டதா என்ற கோணத்தில் கும்மிடிப்பூண்டி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended