பஞ்சபூதங்களை காப்பது எப்படி?
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
பஞ்சபூதங்கள் மாசு அடையாமல் தடுக்கும் வழிமுறைகள் ஆகிய நீர் ,நெருப்பு, நிலம், காற்று ,ஆகாயம், இவைகளின் மாசு அடையாமல் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள நாம் செய்யும் வழிமுறைகள் இயற்கையை பழைய நிலைக்கு,பழைய காலத்திற்கு பின்னோக்கி தான் செல்ல வேண்டும் .
மக்களாகிய ஒவ்வொருவரும் அவர்கள் தான் தன்னலம் மற்றும் பொதுநலம் கருதி, எது தேவை இல்லை என முடிவு எடுக்க வேண்டும் தற்போது உள்ள சூழ்நிலையில் தொழில்துறை அனைத்து தொழிற்சாலைகள் இல்லாமல் சிலர் பொருட்களையும் எதுவும் உற்பத்தி செய்யவோ முடியாத சூழ்நிலையில் தான் மாசு அடையாமல் பாதுகாத்து கொள்ள முடியும்.
ஆனால் தற்போது உள்ள சூழ்நிலையில் நாம் மக்கள் மிக வேகமாக செல்ல வேண்டும் இதற்கு தற்போது நவீன கால தொழில்நுட்ப முறைகளில் நாம் உபயோகப்படுத்தும் பொருட்கள் வண்டி வாகனம் அனைத்திலும் மாசு இல்லாமல் எதையும் செய்ய இயலாது இதில் அனைத்து தொழிற்சாலைகள் மற்றும் பெரும் நகரங்களில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் என ஒன்று உண்டு அது சரியாக செயல்பட்டு வந்தால் மற்றும் பொதுமக்களும் சுகாதாரமான முறையில் நாம் பின்வரும் சந்ததியினர்களுக்கு நோய்கள் பரவாமல் பாதுகாத்துக் கொள்ள உயிர் வாழ்வதற்கு காற்று மற்றும் நீர் நிலம் ஆகாயத்தையும் காசு அடையாமல் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள முன் வர வேண்டும் .
SP. மணிகண்டன்,
பெரம்பலூர்