• முகப்பு
  • crime
  • கள்ளக்குறிச்சி அருகே வீடு புகுந்து கொடூரமாக வெட்டிக் கொலை.

கள்ளக்குறிச்சி அருகே வீடு புகுந்து கொடூரமாக வெட்டிக் கொலை.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த புதுஉச்சிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணசாமி .இவர் கடந்த பத்து வருடமாக கொங்குராயபாளையம் பஸ் நிறுத்தம் அருகே சப்ளையர்ஸ் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் வழக்கம் போல் கடையை மூடி விட்டு வீடு திரும்பிய நாராயணசாமி வீட்டுக்கு வந்தவுடன் தண்ணீர் குடிக்க சென்றுள்ளார். அப்பொழுது திடீரென்று 6 பேர் கொண்ட கும்பல் வீட்டுக்குள் நுழைந்து நாராயணசாமியை சரமாரியாக வெட்டியதில் நாராயணசாமி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வெளியே வந்து பார்த்த பொழுது நாராயணசாமி ரத்தவெள்ளத்தில் சாலையில் இறந்து கிடந்தார். ஊர் பொதுமக்கள் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் நாராயணசாமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி நாராயணசாமியின் உறவினர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கள்ளக்குறிச்சி - வேப்பூர் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சாலை மறியல் போராட்டத்தால் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக கள்ளக்குறிச்சி - வேப்பூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் ராஜலட்சுமி,திரிமேனி, பாலசுப்ரமணியன் ஆகியோர் தலைமையிலான போலீசார் கொலை நடைபெற்ற இடத்தில் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். இந்த நிலையில் போலிசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் புது உச்சிமேடு பகுதியைச் சேர்ந்த ராமு என்பவர் நாராயணசாமி நடத்தி வந்த சப்ளையர்ஸ் கடைக்கு எதிரே இருசக்கர வாகனம் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் போலீசார் தெரிவிக்கின்றனர் . மேலும் நாராயணசாமியை சரமாரியாக வெட்டி கொலை செய்து தப்பி ஓடிய ஆறு பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். புதுஉச்சிமேடு முத்துமாரியம்மன் கோயில் காப்பு கட்டும் திருவிழா நடைபெற இருந்த நிலையில் அக்கிராமத்தில் ஒருவர் வீடு புகுந்து சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended