• முகப்பு
  • district
  • திருவாரூரில் வீடு எரிந்து மூதாட்டி உயிரிழப்பு.

திருவாரூரில் வீடு எரிந்து மூதாட்டி உயிரிழப்பு.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

திருவாரூர் மாவட்டம் கீழக்கா வாதுக்குடி ஊராட்சிக்குட்பட்ட டோல்கேட் பகுதியில் வசிக்கும் முருகன் என்பவரின் மனைவி மல்லிகா வயது 55 என்பவர் கூலி வேலை செய்து வருகிறார். அவருடன் இவரது பேரன் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த தனுஷ் என்பவர் தங்கி உள்ளார். இந்த நிலையில் தனுஷ் ஒரு வாரத்திற்கு முன்பு தனது சொந்த ஊரில் நடக்கும் கோவில் திருவிழாவிற்காக ஊருக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு மல்லிகா தனது குடிசை வீட்டின் கதவினை உள்பக்கமாக பூட்டு போட்டுவிட்டு வீட்டுக்குள் உறங்கிக் கொண்டிருந்தார். அப்பொழுது இன்று அதிகாலை மின் கசிவு காரணமாக அவரது வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சத்தம் கேட்டு எழுந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயை அணைக்க முயற்சி செய்தவுடன் திருவாரூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு  துறையினர் தீயை முழுவதுமாக அணைத்தனர். இருப்பினும் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த மூதாட்டி மல்லிகா கதவை உள்பக்கம் பூட்டு போட்டிருந்ததால் வெளியே வர முடியாமல் தீயில் கருகி  உயிரிழந்துள்ளார். இதனையடுத்து திருவாரூர் தாலுகா காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் தீ விபத்துக்கான காரணம் குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மூதாட்டி தீ விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் செய்தியாளர் இளவரசன்.

VIDEOS

RELATED NEWS

Recommended