Author: வவுனியா - ந. அகிலன்

Category: இலங்கை

வவுனியா மரக்காரம்பளை பகுதியில் வீடொன்றுக்குள் அத்துமீறி நுளைந்த காவாலிக்கூட்டம் வீட்டை உடைத்து சேதப்பட்டுத்தியுள்ளது.


குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்…

குறித்த பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் இன்று அதிகாலை உள்நுளைந்த காவாலிக்கூட்டம் வீட்டின் பிரதான வாயிலை உடைத்து சேதப்படுத்தியதுடன், காணிக்குள் உள்நுளைந்து கதவுகள், யன்னல்களையும் அடித்து சேதப்படுத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

குறித்த வீட்டின் உரிமையாளர்கள் யாரும் இல்லாத சந்தர்ப்பத்தில் இச்சம்பவம் இடம்பெற்றதுடன் காலை வீடு சென்று பார்த்தபோதே தமது வீடு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளரால் நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இதேவேளை அருகில் உள்ள கண்காணிப்பு கமராவில் தாக்குதல் மேற்கொண்ட நபர்கள் தொடர்பான காட்சிகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அதன் உதவியுடன் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

Tags:

#srilankalivenews, #srilankanewsintamil, #srilankanews,  #agadhigal #srilankaagadhigal #thegreatindianews #இலங்கைசெய்திகள் #தமிழ்செய்திகள் #மாகாணசெய்திகள்
Comments & Conversations - 0